உறுதியான இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடு மிகவும் கொந்தளிப்பான தருணத்தில் இருக்கும் நிலையில் மிகவும் சவாலான பணியை பொறுப்பேற்பதற்கு முன்வந்து பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவிற்கு எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.
மீண்டும் உறுதியான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளேன் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்