Sunday, May 5, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சஜித்தின் முடிவால் நெருக்கடியில் ரணில்

சஜித்தின் முடிவால் நெருக்கடியில் ரணில்

1 minutes read

சஜித் அணியினரின் ஆதரவு டலஸ் அழகப்பெருமவிற்கு ஒரு பலமாகவே அமைத்துள்ளது என தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,”சஜித் அணியினரின் ஆதரவு டலஸ் அழகப்பெருமவிற்கு ஒரு பலமாகவே அமைந்தாலும் தேர்தல் என்று பார்க்கும் போது மொட்டு கட்சியினர் தமது பிரதான வேட்ப்பாளராக ரணிலை தான் தெரிவு செய்திருக்கிறார்கள்.

அந்த கட்சியின் இன்னொரு அணியினர் தான் அழகப்பெருமவை முன்கொண்டு வருகிறார்கள். இந்த இரண்டு போட்டிகளும் ஒரே கட்சிக்குள் தான் நடக்க போகின்றது.

மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் உள்ளக முரண்பாடு எவ்வளவு வன்மையானது என்பதை நாம் இந்த தேர்தலில் பார்க்கலாம்.

இந்த ஜனாதிபதி தேர்தல் என்பது மீண்டும் ஒருமுறை இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களின் விலையை தீர்மானிக்கும் ஒரு தேர்தலாகவே அமைகின்றது.

இந்த தேர்தல் முற்றுமுழுதாக விலை போகின்றவர்களின் தேர்தலாகவே உள்ளது.

எனவே யார் அதிக விலை கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்தே அடுத்த ஜனாதிபதி யார் என்பதை தீர்மானிக்க முடியும் என்று தான் சொல்ல வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More