வெளியுறவு அமைச்சர், எஸ் ஜெய்சங்கர் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். உலகம் ஆற்றல் மற்றும் உணவு நெருக்கடியை எதிர்கொள்வதாக இதன் போது அவர் எடுத்துரைத்துள்ளார்.
ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றேன். கொவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரேன் மோதலில் இருந்து இடையூறுகள் குறித்து அவசரமாக கவனிக்கப்பட வேண்டும்.
ஏதிர்வரும் செப்டம்பர் 15-16 ஆகிய திகதிகளில் உஸ்பெகிஸ்தான் – சமர்கண்ட் நகரில் வருடாந்த ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு இடம்பெறவுளளது. உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் பேரவையின் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட வாழ்த்துக்களை தெரிவித்த ஜெய்சங்கர், பாதுகாப்பு, பொருளாதாரம், ஆகிய துறைகளில் உஸ்பெக் ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட வர்த்தக இணைப்பு மற்றும் கலாச்சாரம் என்பன முக்கியமானது என குறிப்பிட்டார். பிராந்திய ஒத்துழைப்பு மூலம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் குறித்தும் கருத்துக்களை பகிர்ந்தார்.
மேலும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஜெய்சங்கர் இதன் போது மீண்டும் வலியுறுத்தினார்.