Monday, May 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புகையிரதம் மோதி ஒருவர் பலி

புகையிரதம் மோதி ஒருவர் பலி

1 minutes read

கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை புகையிரதத்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட – நித்தவெல பிரதேசத்தில் பகுதியில் , கண்டியிலிருந்து மாத்தளை நோக்கி பயணித்து கொண்டிருந்த புகையிரதத்தில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 34 வயதுடைய, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.  

சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More