Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எலிசபெத் ராணியின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ளவுள்ள ரணில்

எலிசபெத் ராணியின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ளவுள்ள ரணில்

1 minutes read

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிக் கிரியைகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கவுள்ளார்.

ரணில் பிரித்தானியா விஜயம்

ராணியின் இறுதிக் கிரியைகளில் பங்குபற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் பிரித்தானியா விஜயம் செய்யவுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதியின் பிரித்தானிய விஜயத்திற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி செயலகம் மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எலிசபெத் ராணியின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்ளவுள்ள ரணில் | Ranil To Attend Queen Last Rites

பிரித்தானிய அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள்

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி, பிரித்தானிய அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் 18ஆம் திகதி ஜனாதிபதி பிரித்தானியா விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறெனினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரித்தானிய விஜயம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத் தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More