Sunday, May 5, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அவுஸ்திரேலியாவில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள்

அவுஸ்திரேலியாவில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள்

1 minutes read

தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாது, தன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 35ம் ஆண்டு நினைவு நிகழ்வான தியாக தீப கலை மாலை நிகழ்வு, எதிர்வரும்செப்ரம்பர் மாதம் 25ம் நாள்  ஞாயிற்றுக்கிழமை மெல்பேர்னில் இடம்பெறவுள்ளது. ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப் போராளியான திலீபன், காந்தி தேசத்திடம் தமிழீழ மக்களுக்காக நீதிகோரி சாத்வீக வழியில் போராடினான்.

உடனயாக தீர்வு காணப்படவேண்டிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் மேற்கொண்ட பயணம், எமது விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான அர்ப்பணிப்பாகியது. பன்னிருநாட்கள் தன்னை உருக்கி உருக்கி எரிந்தணைந்த அந்தத் தியாக தீபத்தின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Details of the THIYAAGI THILEEPAN’s Melbourne Memorial Event are:
இடம்: Victorian Tamil Community Centre Palmyra Hall, 40-44 Lonsdale Street, Dandenong, Vic 3175காலம்: 25/09/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 – 8 மணி.தொடர்புகளுக்கு: 0433 002 619

உணர்வுபூர்வமாக  நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் மெல்பேர்ன்வாழ் அனைத்து உறவுகளையும் வருகைதந்து பங்கெடுத்துக்  கொள்ளுமாறு விக்ரோறியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். 

அத்துடன் உங்களிற்கு தெரிந்த தமிழ்   உறவுகளிற்கும் தெரியப்படுத்தி முழுக்குடும்பத்துடன் கலந்துகொள்ளுமாறும் அன்புடன் கேட்டுக்  கொள்ளப்படுகின்றீர்கள்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – விக்டோரியா 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More