Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இரு மாணவர் குழுக்கள் பேராதனை பல்கலையில் மோதல்

இரு மாணவர் குழுக்கள் பேராதனை பல்கலையில் மோதல்

1 minutes read

பேராதனை பல்கலைக்கழகத்தில் இரு மாணவர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பெண் உட்பட மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பேராதனை பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் வருடங்களில் கல்வி கற்கும் மூன்று மாணவர்களே இவ்வாறு  காயமடைந்துள்ளனர். பகிடிவதைக்கு எதிரான குழுவினரும் ஆதரவான குழுவினருமே இவ்வாறு மோதிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல்கலைக்கழகத்தின் சிற்றுண்டிச்சாலைக்கு அருகாமையில் நேற்றுமுன்தினம் (14) மாலை இந்த மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், பல்கலைக்கழக நிர்வாகமும் தனியான விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பகிடிவதைக்கு எதிரானவர்கள் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More