Monday, May 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மேலும் 12 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

மேலும் 12 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

1 minutes read

தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 12 பேரை இன்று செவ்வாய்க்கிழமை  காலை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக  தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர்.

தனுஷ்கோடி அடுத்துள்ள இரண்டாம் மணல் திட்டில் குழந்தைகளுடன் இலங்கை தமிழர்கள் உணவின்றி தவித்து வருவதாக மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹோவர் கிராப்ட் ரோந்து கப்பலில் இந்திய கடலோர காவல்படை வீரர்கள்  விரைந்து சென்று மணல் திட்டில் தஞ்சமடைந்திருந்த இலங்கை தமிழர்களை பத்திரமாக மீட்டு அரிச்சல்முனை அழைத்து வந்து ராமேஸ்வரம்  மரைன் காவல் நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

மரைன் பொலிஸார் நடத்திய விசாரணையில் இலங்கை   யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த  கலைக்குமார், ஆனந்தினி, தில்லையம்மாள் மற்றும் மட்டக்களப்பை சேர்ந்த சசிகரன், கலை செல்வி உள்ளிட்ட 12 பேரும் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்து பின் 2019 ஆம் ஆண்டு மீண்டும் இலங்கை சென்ற நிலையில்  பொருளாதார நெருக்கடி காரணமாக மீண்டும்  இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை (20) அதிகாலை  ஒரு  படகில் புறப்பட்டு தனுஷ்கோடி இரண்டாம்  மணல் திட்டில் சென்று இறங்கியதாக தெரிவித்துள்ளனர்.

பட்டினி சாவில் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள இலங்கையை சேர்ந்த ஒருவரிடம் வீட்டில் உள்ள நகைகளை விற்று பணம் 2 இலட்சம் ரூபாய் கொடுத்து  படகில் தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக தெரிவித்துள்ளனர்.

தங்களை அழைத்து வந்த படகு தனுஸ்கோடி முதல் திட்டில் இறக்கிவிட்டு சென்றதாகவும், காலை முதல் உணவின்றி தவித்து வந்த நிலையில்  அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்களிடம் காப்பாற்றுமாறு உதவி கோரிய நிலையில்; எங்களை இந்திய கடலோர காவல் படை வீரர்கள்  பத்திரமாக மீட்டதாக  தெரிவித்தனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணைக்கு பின் இவர்கள் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் இன்று (20) வரை இலங்கையில் இருந்து 169 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More