Monday, May 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஜனாதிபதியுடன் பிரித்தானியாவுக்கு எண்வர் ஏன் சென்றார்கள் | குமார வெல்கம 

ஜனாதிபதியுடன் பிரித்தானியாவுக்கு எண்வர் ஏன் சென்றார்கள் | குமார வெல்கம 

1 minutes read

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பாரியார் சிரந்தி ராஜபாக்ஷவுடன்  அரசமுறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டதை போன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் செயற்பட கூடாது. பிரித்தானியாவுக்கு ஜனாதிபதியுடன் என்வர் ஏன் சென்றார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குமார வெல்கம கேள்வியெழுப்பினார்.

பிரதி சபாநாயகர் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் மாறுப்பட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. அதிசொகுசு வானங்களில் செல்லும் தேரர்கள் தான் மின்கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். சாதாரண விகாரைகளில் உள்ள தேரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

வறுமை நிலையில் உள்ள விகாரைகளுக்கு மின்கட்டண அதிகரிப்பில் ஏதாவதொரு வழிமுறையில் நிவாரணம் வழங்கப்படுவது அவசியமானது. பொருளாதார ரீதியில் சகல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும். முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சிரந்தி ராஜபக்ஷவுடன் வெளிநாட்டு அரசமுறை பயணங்களை மேற்கொண்டார் இறுதியில் என்னவாயிற்று. நாடு மிக மோசமான பொருளாதார பாதிப்பை எதிர்க்கொண்டுள்ள பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் 8 பேர் பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்கள்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ செயற்பட்டதை போன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் செயற்பட கூடாது. இதனை அவருக்கு ஆளும் தரப்பினர் குறிப்பிட வேண்டும் என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More