கல்கமுவ பிரசேத்தில் இரட்டைக் கொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் (20) இடம்பெற்றள்ளது. சம்பவத்தில் 16 மற்றும் 67 வயதான இருவரே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
மண்வெட்டியால் தாக்கப்பட்ட 67 வயதான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 16 வயதான சிறுவன் பலத்த காயமடைந்து கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் 42 வயதான ஒருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.