பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவணத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கையொப்பமிட்டுள்ளார்.
பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டத்தை (Prevention of Terrorism Act – PTA) நீக்குமாறு வலியுறுத்தி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் காங்கேசன்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்துப் போராட்டம் இன்று (26) நுவரெலியா, ரிகில்கஸ்கட நகரில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போதே ஜீவன் தொண்டமான் குறித்த ஆவணத்தில் கையொப்பமிட்டார்.