கொழும்பில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.
அரசின் அடக்குமுறைச் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரியும், அனைத்துப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்ளார் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரையும் உடன் விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரியும் கொழும்பு – மருதனை எல். பின்ஸ்டன் மண்டபத்துக்கு முன்னால் உள்ள சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பேரணி கொழும்பு – கோட்டை ரயில் நிலையம் வரை செல்லவுள்ளதோடு அங்கு பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.