நாட்டின் இருவேறு பகுதிகளில் பல்வேறுகொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கல்கிஸ்ஸ
கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்து 1426,500 ரூபா பணத்திணை கொள்ளைட்டு சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கல்கிஸ்ஸ புகையிரத நிலையத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேக நபரிடமிருந்து 4 தங்க சங்கிலிகள், 8 ஜோடி தங்க வலையல்கள் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
நுகேகொடை
நுகேகொடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர் ஒருவர் பொரளை -ஹல்கஹவத்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு மிரிஹான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதன்போது கைது செய்யப்பட்டவர் 37 வயதுடைய பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவர்.
13 இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளையிட்டுச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபரின் வீட்டிலிருந்து 195 கையடக்கத்தொலைப்பேசிகளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.