மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் உள்ள இசைமாலைதாழ்வுப் பகுதியில் இன்று காலை 9.20 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பட்டா ரக வாகனம் வீதியின் அருகில் இருந்த மரத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இதன்போது சாரதி வாகனத்தினுள் நசியுண்டு உயிரிழந்தார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த முருங்கன் பொலிஸார் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.