உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சரவை அமைச்சரான சரத் வீரசேகர எம்.பி., ஜனாதிபதி செயலகத்தில் ஸ்தாபிக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலகத்தில் இருந்து பணியாற்றவுள்ளார்.
ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை வழிநடத்தும் பொறுப்பு கலாநிதி சரத் வீரசேகரவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.