0
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் இனி மீண்டெழ முடியாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
“இலங்கையில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலின்போது எந்தவொரு கட்சியாலும், ஆட்சி அமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையைப் (113) பெற முடியாமல் போகும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான சாத்தியமே உருவாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.