யாழ்.பல்கலைக் கழகத்தில் மாவீரர் தின முதல் நாள் நினைவேந்தல் இன்று ஆரம்பமானது.
நிகழ்வின் போது பல்கலைக்கழக மாணவர்களால் மாவீரர் நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினார்கள்.
மாவீரர் தின நிகழ்வை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபி பகுதி பல்கலைக்கழக மாணவர்களால் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளதுடன் தூபியைச்சுற்றி சிவப்பு மஞ்சள் நிறத்திலான வர்ணக்கொடிகள் கட்டப்பட்டுள்ளது.
தாயக விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூரும் மாவீரர் வாரம் உலகமெங்கும் இன்று திங்கட்கிழமை(21) ஆரம்பமானது.
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு தமது உயிரை போராட்டக்களத்தில் தியாகம் செய்தவர்கள் நினைவாக ஒவ்வொரு வருடமும் கார்த்திகை 27 ஆம் திகதி, மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.