Sunday, May 5, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ் பல்கலையில்  முதன் முதலாகக் கணினி விஞ்ஞானத்தில் பேராசிரியர்கள் நியமனம்

யாழ் பல்கலையில்  முதன் முதலாகக் கணினி விஞ்ஞானத்தில் பேராசிரியர்கள் நியமனம்

1 minutes read

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக  கணினி விஞ்ஞானத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். கணினி விஞ்ஞானத்துறையின் முன்னாள் தலைவரும்,  சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.ரமணன்,  சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். சியாமளன் ஆகியோரைப் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை இன்று ஒப்புதல்   வழங்கியுள்ளது. 

பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் இன்று 26 ஆம் திகதி, சனிக்கிழமை, காலை துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய  திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவி உயர்வுக்காக  விண்ணப்பித்த சிரேஷ்ட விரிவுரையாளர்கள் கலாநிதி ஏ. ரமணன்,  கலாநிதி எம் சியாமளன் ஆகியோரின் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்த, மூதவையினால் விதந்துரைக்கப்பட்ட துறைசார் நிபுணர்களின் மதிப்பீட்டு அறிக்கைகள், நேர்முகத் தேர்வு முடிவுகள் ஆகியன இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அவற்றின் அடிப்படையில், கணினி விஞ்ஞானத்துறையின் முன்னாள் தலைவரும்,  சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி ஏ.ரமணன்,  சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம். சியாமளன் ஆகியோர் கணினி விஞ்ஞானத்தில் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணினி விஞ்ஞானத் துறை தாபிக்கப்பட்டு 30 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இவர்கள் இருவரும் முதன் முதலாக கணினி விஞ்ஞானத் துறையில் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.    

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More