Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அம்பாறையில் மாவீரர் நிகழ்வை நடத்தாதீர் என்று பொலிஸ் மிரட்டல்!

அம்பாறையில் மாவீரர் நிகழ்வை நடத்தாதீர் என்று பொலிஸ் மிரட்டல்!

1 minutes read

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் நாளை நடக்கவிருக்கின்ற மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதில் இருந்து தவிர்க்குமாறும், அதிலிருந்து உடனடியாக விலகி நிற்குமாறும் திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அறிவித்துள்ளார்.

பொத்துவில் பிரதேச சபையின் உப தவிசாளர் பெருமாள் பார்த்தீபனிடம் இந்த அறிவுறுத்தல் கடிதம் இன்று கையளிக்கப்பட்டுள்ளது.

“நாளை 27ஆம் திகதி கஞ்சிகுடிச்சாறு புலிகள் இயக்கத்தின் மயான பூமியில் புதைக்கப்பட்டுள்ள மரணித்த புலிகளை நினைவுகூரவுள்ள மாவீரர் தின நிகழ்வுகளை நடத்த வேண்டாம்.

மேலும், அந்த மயான பூமியில் புதைக்கப்பட்டுள்ள மரணித்த புலிகள் இயக்க உறுப்பினர்களின் தாய், தந்தை மற்றும் உறவினர்களால் மீண்டும் புலிகள் இயக்கத்தை ழுச்சி பெறும் வகையில் இறந்த உறுப்பினர்களை நினைவுகூரும் வகையில் நடத்த இருக்கின்ற மாவீரர் தின நிகழ்வுகளைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

2011.08. 29ஆம் திகதி இலங்கையின் ஜனநாயக சோசலிசக் குடியரசின் இலக்கம் 1721(02) கீழ் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலமாக தடை செய்யப்பட்டுள்ளதுடன் புலிகள் இயக்கம் தொடர்பான எந்தவித செயற்பாடுகளோ, நிகழ்வுகளோ நடத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, அதை மீறி இவ்வாறான நிகழ்வுகளில் கலந்துகொண்டால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும் என்பதைத் தெரிவிக்கின்றேன்” – என்று திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எழுத்து மூலம் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

பிரதி அக்கரைப்பற்று பிரதிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More