நுவரெலியா – லிந்துலை சரஸ்வதி ரோயல் கல்லூரியின் மாணவர்கள் 20 பேர் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2.30 இற்கு இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களில் ஆரம்பப் பிரிவு மாணவர்கள் 20 பேரும், பெற்றோர் ஒருவரும்,
ஆசிரியர் ஒருவரும் அடங்குகின்றனர்.
பாதிக்கப்பட்ட 22 பேரும் சிகிச்சைகளுக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாடசாலைக்கு அருகிலுள்ள மரத்தில் காணப்பட்ட குளவிக்கூடே இவ்வாறு கலைந்து வந்து தாக்கியுள்ளது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.