Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் வீடு புகுந்து திருட்டு: 14 பவுண் நகைகளுடன் 4 பேர் கைது!

யாழில் வீடு புகுந்து திருட்டு: 14 பவுண் நகைகளுடன் 4 பேர் கைது!

1 minutes read

யாழ்., பருத்தித்துறையில் வீடொன்றை உடைத்து நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் நான்கு இளைஞர்களைக் கைது செய்த பொலிஸார், அவர்களிடமிருந்து 14 பவுண் நகைகளையும் மீட்டனர்.

பருத்தித்துறை, புலோலி – சாரையடிப் பகுதியில் கடந்த 7ஆம் திகதி வீட்டின் உரிமையாளர்கள் வைத்தியசாலைக்குச் சென்றதைச் சாதகமாகப் பயன்படுத்தி வீடு உடைக்கப்பட்டு அங்கிருந்த நகை மற்றும் ரொகக்கப்பணம் என்பன திருடப்பட்டிருந்தன.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பருத்தித்துறை பொலிஸ் குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைவாக, நேற்று (14) குற்றத் தடுப்பு பிரிவின் உப பரிசோதகர் எஸ்.ஐ. விராஜ் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போது பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து தாலிக் கொடி, மோதிரம், தோடு அடங்கலாக 14 பவுண் நகைகளும் மீட்கப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. விசாரணையின் பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More