Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மீட்கப்பட்ட 104 ரோகிங்கியர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமில்!

மீட்கப்பட்ட 104 ரோகிங்கியர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமில்!

2 minutes read

இலங்கையின் வடக்குக் கடற்பரப்பில் தத்தளித்த மியன்மாரைச் சேர்ந்த 104 ரோகிங்கியர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் மருத்துவப் பரிசோதனையின் பின்னர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ரோகிங்கியாவில் இருந்து இந்தோனேசியாவுக்குப் பயணித்த வேளை நடுக்கடலில் படகு பழுதடைந்து தத்தளித்த ரோகிங்கியர்களை யாழ்ப்பாணம் மீனவர்கள் அவதானித்து இலங்கைக் கடற்படையினருக்குத் தகவல் வழங்கினர். இதையடுத்து நேற்று மாலை சம்பவ இடத்துக்குக் கடற்படையினர் சென்றிருந்தனர்.

இன்று காலை ரோகிங்கியர்கள் 104 பேரும் கடற்படையினரின் படகுகளில் ஏற்றப்பட்டு காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டனர்.

இவர்கள் பங்களாதேஷில் தங்கியிருந்து இந்தோனேசியா சென்ற சமயமே இலங்கைக் கடற்பரப்புக்குள் அவர்களின் படகு பிரவேசித்துள்ளது. இவர்கள் பங்களாதேஷ் நாட்டில் யு.என்.எச்.சி.ஆரின் பொறுப்பில் இருந்தமைக்கான பதிவு அட்டைகளை வைத்துள்ளனர்.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட 104 பேரையும் யாழில் உள்ள யு.என்.எச்.சி.ஆரின் பிரதிநிதிகள் மற்றும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இவர்களில் சுகவீனமடைந்திருந்த நால்வர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More