Saturday, May 4, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் கடலட்டை பதனிடும் தொழிற்சாலை திறப்பு

யாழில் கடலட்டை பதனிடும் தொழிற்சாலை திறப்பு

1 minutes read

யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் கடலட்டை பதனிடும் தொழிற்சாலை இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. 

இன்று வியாழக்கிழமை  “சுகந் இன்ரநஷ்னல்” நிறுவனத்தின் கடலட்டை பதனிடும் தொழிற்சாலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. 

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் தொழிலதிபர் சுகந்தசீலன் அரவிந்தனின் முயற்சியினால் உருவாக்கப்பட்டுள்ள இந்த  நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கணக்கானோர் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகள், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள்,

பொலிஸ் அதிகாரிகள், கடற்படையினர் கலந்து கொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More