Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பொலிஸாருக்கு எதிராகக் கிராம சேவகர்கள் போராட்டம்!

பொலிஸாருக்கு எதிராகக் கிராம சேவகர்கள் போராட்டம்!

2 minutes read

யாழ். தெல்லிப்பழை பொலிஸாருக்கு எதிராக, தெல்லிப்பழை பிரதேச செயலக கிராம சேவகர்கள், பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜே/239 பிரிவு கட்டுவன் மேற்கு கிராம சேவகர் அலுவலகம் சில தினங்களுக்கு முன்னர் தீயிட்டு எரிக்கப்பட்டது. இது தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

ஆனால், இதுவரை தெல்லிப்பழை பொலிஸார் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை எனத் தெரிவித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “சமாதான அலுவலர், சமாதான நீதிவானுக்கே இந்த நிலையா?”, “இன்று எங்களுக்கு; நாளை உங்களுக்கு”, “எங்கள் சேவைக்கு பாதுகாப்பு இல்லையா?”, “அலுவலகத்தைச் சேதமாக்கியோரைக் கைது செய்”, “தீ வைத்தது உங்கள் கை; வெந்தது உங்கள் சொத்து” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More