ரயில்வே சேவைக்கு 3,000 புதிய பணியாளர்கள் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புதிய ஆட்சேர்ப்புக்கான நேர்முகத்தேர்வு இந்த நாட்களில் நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது அரச சேவைக்கு உள்வாங்கப்பட்டுள்ள செயலணி ஊழியர்களில் 3,000 பேர் ரயில்வே சேவைக்கு இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ரயில்வே துறையில் நீண்ட நாட்களாக பணியாளர்களை பணிக்கு அமர்த்தப்படவில்லை. ஊழியர்களை நியமித்து சம்பளம் கொடுக்க வழியில்லை.
இதன் காரணமாகவே தற்போது அரச சேவையில் உள்ள 3,000 பணியாளர்களை சேவைக்கு அமர்த்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.