வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசால் கொண்டுவரப்பட்ட புதிய வரிக் கொள்கை மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தன்னிச்சையான அசாதாரண வரித் திருத்தத்தை உடனடியாக மீளப்பெறு, சுகாதாரக் கட்டமைப்பும் சீர்குலைந்துள்ளது, சத்திர சிகிச்சைகளும் இல்லை மருந்துகளும் இல்லை போன்ற பதாதைகளை வைத்தியர்கள் தாங்கியிருந்தனர்.