Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 14 இலங்கையர்களுக்குப் பிரான்ஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை!

14 இலங்கையர்களுக்குப் பிரான்ஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை!

1 minutes read

இலங்கை, வங்கதேசத்திலிருந்து குடியேறிகளை ஐரோப்பியாவுக்குக் கடத்தும் செயலில் ஈடுபட்ட 14 இலங்கையர்களுக்குப் பிரான்ஸ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

இதில் முக்கிய குற்றவாளியாக அறியப்பட்ட நபர் Serifontaine எனும் பிரான்ஸ் கிராமத்தில் மளிகைக் கடை நடத்திக்கொண்டு ஆட்கடத்தும் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது. இதற்காக அவருக்கு நான்காண்டு காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இவர் இலங்கை, வங்கதேசத்திலிருந்து ஐரோப்பியாவுக்குள் குடியேறிகளை அழைத்து வருவதற்கான விலையை நிர்ணயித்து, பாதையை முடிவு செய்பவராக இருந்திருக்கின்றார். இவரை கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்து உக்ரைன் வழியாக குடியேறிகளை அழைத்து சென்றதாகக் கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் உள்ள மற்றொரு குற்றவாளிக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே நாடு கடத்தப்படுவதற்கான பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இலங்கையர்களுக்கு இதைவிட குறைவான சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அரசின் கணக்குப்படி, கடந்த 2022 ஆம் ஆண்டு ஐரோப்பியாவின் பெருநிலப்பரப்பிலிருந்து ஆங்கிலக் கால்வாய் வழியாக 45 ஆயிரம் குடியேறிகள் இங்கிலாந்தை அடைந்திருக்கின்றனர். 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கூடுதலாக 17 ஆயிரம் குடியேறிகள் இங்கிலாந்தை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More