Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டக்களப்பில் கைதி ஒருவர் தப்பியோட்டம்!

மட்டக்களப்பில் கைதி ஒருவர் தப்பியோட்டம்!

0 minutes read

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்திலிருந்து கைதி ஒருவர் இன்று தப்பியோடியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் கஞ்சாவுடன் நேற்று ஒருரைக் கைது செய்த பொலிஸார், அவரை இன்று பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.

நீதிவான் அறையில் பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த கைதியின் விலங்கைப் பொலிஸார் கழற்றிய போது குறித்த நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

இதையடுத்துத் தப்பியோடிய கைதியைப் பொலிஸார் தேடி வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More