Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பிரபாகரன் உயிருடன்! – பழ.நெடுமாறன் தகவல்

பிரபாகரன் உயிருடன்! – பழ.நெடுமாறன் தகவல்

2 minutes read

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருக்கின்றார் என்று உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நலமுடன், உயிருடன் உள்ளார். பிரபாகரன் நலமுடன் இருப்பது ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும்.

பிரபாகரன் குறித்து தவறான தகவல் பரப்பப்பட்டு விட்டது. அவருடன் நாம் தொடர்பில்தான் உள்ளோம்.

பிரபாகரனின் அனுமதியின் பேரிலேயே இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறுகின்றது. பிரபாகரனின் மனைவி, மகளும் நலமுடன் உள்ளனர்.

உரிய நேரத்தில் மக்கள் முன் வருவார். பிரபாகரன் எங்கு உள்ளார் என்பது தற்போது அறிவிக்க இயலாது. தமிழக அரசும், மக்களும் பிரபாகரனுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

இலங்கையில் ராஜபக்சக்களின் ஆட்சி முடிவுக்கு வந்திருப்பதால் இந்த அறிவிப்பை வெளியிடுகின்றோம்” – என்றார்.

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கும், இராணுவத்துக்கும் இடையே இடம்பெற்ற யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தில் இறுதி யுத்தத்தின் போது பிரபாகரன் உயிரிழந்துவிட்டார் என்று இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து பிரபாகரன் குறித்து மாறுபட்ட பல தகவல்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. பிரபாகரன் இறந்தது உண்மை என ஒரு தரப்பும் இல்லை, பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என மற்றொரு தரப்பும் கூறி வந்தன.

இந்நிலையில் தஞ்சாவூரில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த போது பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More