பத்து வயது சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த நான்கு பேரைப் பொலிஸார் கைது செய்தனர்.
பொலிஸாரின் கூற்றுப்படி, வெலிகமவில் கடந்த 10 ஆம் திகதி பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற சிறுமி சந்தேகநபர்களால் கடத்தப்பட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டார்.
அத்துடன் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குச் சந்தேகநபர்களால் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான 20 வயதுடைய நான்கு சந்தேகநபர்களும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமி மாத்தறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.