Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இந்திய விசா அலுவலகத்தில் திருடிய ஐவர் கைது!

இந்திய விசா அலுவலகத்தில் திருடிய ஐவர் கைது!

1 minutes read

கொழும்பிலுள்ள இந்திய விசா விநியோக அலுவலகத்தில் மடிக்கணினி மற்றும் டி.வி.ஆர். இயந்திரம் என்பவற்றைத் திருடியமை தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிருலப்பனை மற்றும் வௌ்ளவத்தை பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கிருலப்பனை பகுதியிலுள்ள ஓடையொன்றில் வீசப்பட்டிருந்த நிலையில் மடிக்கணினி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 63 வயதான பெண் ஒருவரும் அடங்குகின்றார்.

கொழும்பு – தும்முல்ல பகுதியிலுள்ள இந்திய விசா அலுவலக்துக்குள் கடந்த 14ஆம் திகதி இரவு புகுந்து அங்கிருந்து மடிக்கணினி மற்றும்டி.வி.ஆர். இயந்திரம் என்பவற்றைத் திருடிய சந்தேகநபர்கள் தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More