உக்ரைனில் விரைவில் அமைதி ஏற்பட வேண்டும் என்று ஜேர்மனி முன்வைத்த பிரேரணைக்கு ஆதரவாக ஐ.நா பொதுச் சபை உறுப்பினர்கள், நேற்று வியாழக்கிழமை (23) வாக்களித்தனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைக் கண்டித்துத் தீர்மானம் எடுக்கப்பட்ட போது, இலங்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
மொத்தம் 141 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தன. ரஷ்யா, பெலாரஸ், வட கொரியா, சிரியா, மாலி, எரித்திரியா மற்றும் நிகரகுவா ஆகிய ஏழு நாடுகள் அதை எதிர்த்தன.
இந்த வாக்கெடுப்பின் போது சீனா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் வாக்களிக்கவில்லை.