Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தேர்தல் ஒத்திவைப்பு! – ஆணைக்குழு அறிவிப்பு

தேர்தல் ஒத்திவைப்பு! – ஆணைக்குழு அறிவிப்பு

1 minutes read

ஏற்கனவே திட்டமிட்டவாறு எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளது.

அதற்கமைய, தேர்தலுக்கான புதிய திகதி எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டில் இல்லாத விடயங்கள் காரணமாக மார்ச் 9 ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினர் இன்று முற்பகல் கூடி ஆராய்ந்தனர். இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா, அதன் உறுப்பினர்களான எஸ்.பி. திவரத்ன, எம். எம். முகமது மற்றும் கே. பி. பி. பத்திரன ஆகியோர் பங்கேற்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More