அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவிலுள்ள சொறிக்கல்முனை பிரதேசத்தைச் சோந் 13 வயது சிறுவன் ஒருவன் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயுள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (28) அவரது தாயிடமிருந்து மீட்டுள்ளதாக சவளக்கடை பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவனின் தாயாரும் தந்தையாரும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்ந்துவரும் நிலையில் தந்தையுடன் இருந்த சிறுவனை கடந்த ஞாயிற்றுக்கிழமை வீரமுனையில் மரணவீட்டிற்கு அழைத்துச் சென்ற நிலையில 13 வயதுடைய சிறுவன் காணாமல் போயிருந்தான்.
குறித்த சிறுவன் மரணவீட்டில் இருந்து தந்தையாருக்கு தெரியாமல் அவனது நண்பனின் உதவியுடன் வவுணதீவு கொத்தியாவலை பிரதேசத்திலுள்ள தாயாரை தேடி சென்று அங்கு இருந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து சிறுவனை இன்று (28) செவ்வாய்க்கிழமை மீட்டு பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.