கல்பிட்டி கடற்கரைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடல் மார்க்கமாக கடத்த முற்பட்டதாக சந்தேகிக்கப்படும் பொருட்களுடன் இரண்டு படகுகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த படகுகளிலிருந்து 1 கிலோ ஏலக்காய், 15 கிலோ காய்ந்த கடல் வெள்ளரி, 14 கிலோ காய்ந்த முந்திரி, 10 கிலோ அரிசி, 248 கிலோ சீனி, 100 கிலோ கோதுமை மா, 03 கிலோ உலர் மீன் , 270 தேயிலைப் பொதிகள், 680 அழகு சாதனப் பொருட்கள் மற்றும் 2,930 சவர்க்கார கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட படகுகள் உட்பட மீட்கப்பட்ட பொருட்கள் சுங்க பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.