Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சிறப்பாக நடந்தேறிய கச்சதீவுத் திருவிழா!

சிறப்பாக நடந்தேறிய கச்சதீவுத் திருவிழா!

1 minutes read

யாழ்., நெடுந்தீவு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா சிறப்பாக நடைபெற்று நிறைவடைந்தது.

திருவிழா நேற்றுமுன்தினம் மாலை 4 மணிக்கு கொடியேற்றத்தோடு ஆரம்பமானது. அன்றிரவு விசேட ஆராதனையைத் தொடர்ந்து சுற்றுப்பிரகாரமும் இடம்பெற்றது.

திருவிழாவின் இரண்டாவது நாளான நேற்றுக் காலை 6 மணிக்கு திருச்செபமாலை நடைபெற்று, 6.30 மணிக்கு யாழ். ஆயர் மற்றும் அருட்தந்தையர்கள் வரவேற்கப்பட்டு 7 மணிக்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

திருப்பலி கொழும்பு மறை மாவட்டத்தின் துணை ஆயர் அருட்தந்தை அன்ரன் தில்லைநாயகம் மற்றும் யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளார் தலைமையில் இடம்பெற்றது.

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவில் 2 ஆயிரத்து 800 இலங்கை பக்தர்களும், 2 ஆயிரத்து 100 இந்திய பக்கர்களுமாக பக்தர்கள் 4 ஆயிரத்து 900 பேரும், வர்த்தகம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக 200 பேர் என மொத்தமாக 5 ஆயிரத்து 100 பேர் வருகை தந்தனர் என்று அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவித்தன.

கொரோனா காரணமாக கடந்த காலங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பக்தர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More