Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஒற்றுமையைக் குழப்புவர் டக்ளஸ்தான்! – வடக்கு மீனவர்கள் குற்றச்சாட்டு

ஒற்றுமையைக் குழப்புவர் டக்ளஸ்தான்! – வடக்கு மீனவர்கள் குற்றச்சாட்டு

1 minutes read

“கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது சுயநலத்துக்காக வடக்கு மீனவர்களைப் பிரித்தாளுகின்றார்.”

– இவ்வாறு ஊர்காவற்றுறை கடற்றொழிலாளர் சமாசத்தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையிலே மாறி மாறி பல இடங்கள் தாரை வார்க்கப்படுகின்றன. ஒரு சம்பவத்தை மறைப்பதற்காக இன்னுமொரு சம்பவத்தை அரசே உருவாக்குகின்றது.

வடக்கில் உள்ள தமிழ் அமைச்சர் மேல் எமக்கு நம்பிக்கை இல்லை. அவர் எம்மைப் பிரித்து, தான் நினைத்தவற்றை சாதிக்கத் துடிக்கின்றார். இதனாலேயே நாம் நேரடியாக ஜனாதிபதியைச் சந்திக்கச் சந்தர்ப்பம் கோரி கடிதம் அனுப்பியுள்ளோம்.

வடக்கில் உள்ள 50 ஆயிரம் கடற்றொழிலாளர் குடும்பங்களின் பிரச்சினைக்கும் ஓர் அடித்தளமாக இந்தச் சந்திப்பு அமைய வேண்டும்” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More