Friday, May 3, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நாட்டின் பல பிரதேசங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பிரதேசங்களில் பலத்த மழை பெய்யக்கூடும்

1 minutes read

ன்று நாட்டின் பல பிரதேசங்களில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ, ஊவா, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, மன்னார், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளை மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

கிழக்கு மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது அந்த பிரதேசங்களில் தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும்.

காங்கேசன்துறையில் இருந்து மன்னார், புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்துக்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்கிழக்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து காற்று வீசக்கூடும். அத்துடன் அக்காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசுவதோடு, கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More