Wednesday, May 1, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மகாவலி திட்டத்தில் தமிழருக்கு காணி வழங்கப்படவில்லை | பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை

மகாவலி திட்டத்தில் தமிழருக்கு காணி வழங்கப்படவில்லை | பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை

1 minutes read

காவலி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சுமார் 10 லட்சம் காணிகளில் எந்த தமிழருக்கும் ஒரு துண்டு காணியேனும் வழங்கப்படவில்லை என யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

யாழ். நல்லூரில் அமைந்துள்ள நல்லை ஆதீனத்தில் நேற்று முன்தினம் (31) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்து சமயம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்த கலந்துரையாடலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் காணப்படுகின்ற தொல்லியல் திணைக்களம், வனவளத் திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் என்பன மிக வேகமாக செயற்படுகின்றன.

தமிழ் மக்களின் பூர்வீக விவசாய நிலங்கள், வழிபாட்டு இடங்களை தொல்லியல் வன ஒதுக்குப்பகுதி என காணிகளை கையகப்படுத்தி, அத்தமிழர்களை காணி அற்றவர்களாக்குவதே இத்திணைக்களங்களின் திட்டமாகும்.

யுத்த காலப்பகுதியில் தமிழர்களுடைய புராதன அடையாளங்கள் மற்றும் வரலாற்று நிலங்கள் பாதுகாக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழர்களிடமிருந்து நிலப் பகுதியை குறைக்க வேண்டும் என்பதில் தென் இலங்கை  திட்டத்தை அரங்கேற்றி வருகிறது.

மகாவலி அதிகார சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரம், பிரதேச செயலகமோ மாவட்ட செயலகமோ கேள்வி கேட்க முடியாத அளவுக்கு அதிகாரம் உள்ள சபையாக காணப்படுகிறது.

மகாவலி L வலயத்தில் உள்ளடங்கும்  முல்லைத்தீவு மாவட்டம், வெலி ஓயா பகுதியளவில் அல்லது முழுதாக சிங்கள மக்களையே குடியேற்ற திட்டம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் 14 ஆயிரம் பேர் காணியற்றவர்களாக பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு இன்னும் காணிகள் வழங்கப்படவில்லை.

இந்து சமயம் பல்வேறு வழிகளிலும் நசுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.

நானறிந்த வகையில், மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், பாராளுமன்றத்தில் இருக்கும்போது இந்து ஆலயங்கள் தொடர்பில் அதிகம் பேசுவார்.

இந்து சமயத்தில் இருக்கின்ற பல்வேறு அமைப்புகளும் ஒன்றிணைந்து வலுவான ஓர் அமைப்பின் கீழ் செயற்படும்போது தமிழ் மக்களின் நிலங்களையும் இந்து சமயத்தையும் பாதுகாக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More