ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்கப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான பி. ஹரிசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியில் தான் வகித்த அனைத்து பதவிகளையும் துறப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
“ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் விரைவில் ஜனாதிபதியிடம் சரணடைவார்கள். நெருக்கடியான சூழ்நிலையிலேயே ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்றார். அவர் மாற்றத்தை ஏற்படுத்திக் காட்டியுள்ளார். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, விமர்சனங்களை மட்டுமே முன்வைத்து வருகின்றார்” – என்றும் ஹரிசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.