யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இறுதி நாள் அஞ்சலி நிகழ்வு பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத்தூபியில் நடைபெற்றது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுச்சுடரை யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராமினால் ஏற்றிவைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதோடு நினைவுத்தூபிக்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
நிகழ்வின் இறுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், பீடாதிபதிகள் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.