Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காதலி இறந்த விரக்தியால் காதலனும் உயிர் மாய்ப்பு!

காதலி இறந்த விரக்தியால் காதலனும் உயிர் மாய்ப்பு!

0 minutes read

காதலி இறந்து சில நாட்களின் பின்னர் காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது.

பலாங்கொட, வெலிகேபொல பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார்.

குடும்பப் பிரச்சினை காரணமாக குறித்த இளைஞரின் காதலி கடந்த சில தினங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மனமுடைந்து கடும் விரக்தியுடன் பொழுதைக் கழித்து வந்த இளைஞர் காதலியின்றி தன்னால் வாழ முடியாது எனக் கூறி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இளைஞர் இறப்பதற்கு முன்னர் தனது காதலியின் பிரிவு குறித்து தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றையும் பதிவேற்றியுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More