Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வரணி விபத்தில் இளம் குடும்பஸ்தர் மரணம்!

வரணி விபத்தில் இளம் குடும்பஸ்தர் மரணம்!

0 minutes read

நண்பனை வீட்டில் இறக்கி விட்டு தனது வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருத்த இளம் குடும்பஸ்தர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

யாழ்.,கொடிகாமம், வரணி – சுட்டிபுரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் வடமராட்சி, தேவரையாளி பகுதியைச் சேர்ந்த புஸ்பராசா ராஜ்குமார் (வயது 30) என்பவரே உயிரிழந்தார்.

குறித்த நபர், சாவகச்சேரியைச் சேர்ந்த தனது நண்பனை அவரது வீட்டில் இறக்கி விட்டு மோட்டார் சைக்கிளில் வடமராட்சியில் உள்ள தனது வீடு நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த வேளை சுட்டிபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக இருந்த மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

விபத்து தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More