Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டக்களப்பிலும் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்புப் போராட்டம்!

மட்டக்களப்பிலும் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்புப் போராட்டம்!

1 minutes read

மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதோடு மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு முன்னால் கண்டனப் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

கடந்த தில தினங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் தமிழ் நீதிபதிகளை எச்சரித்து சரத் வீரசேகர எம்.பி. தெரிவித்த கருத்தைக் கண்டித்து மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி போ.பிறேமநாத் பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதையடுத்து இன்று காலை 9 மணிக்கு மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்கு முன்னால் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற சட்டத்தரணிகள் மற்றும் மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத் தொகுதி சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

நீதித்துறை சுதந்திரத்துக்காகக் குரல் கொடுப்போம், நீதித்துறை சுதந்திரத்தை உறுதி செய், நீதித்துறைக்குள் அரசியல் தலையீடு வேண்டாம், நீதித்துறையின் சுதந்திரமே ஜனநாயகத்தின் தூண், நீதித்துறையில் இனவாதத்தைக் கலக்காதே போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு சுமார் ஒரு மணித்தியாலம் கண்டனப் போராட்டத்திலும் அவர்கள் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More