Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சமஷ்டியைக் கோரத் தமிழருக்கு உரிமை உண்டு! – தினேஷ் சுட்டிக்காட்டு

சமஷ்டியைக் கோரத் தமிழருக்கு உரிமை உண்டு! – தினேஷ் சுட்டிக்காட்டு

1 minutes read

“சமஷ்டி அதிகாரத்தைக் கோருவதற்குத் தமிழர்களுக்கு – தமிழ்க் கட்சிகளுக்கு உரிமை உண்டு. அதனை வழங்குவதா, இல்லையா என்பதை நாடாளுமன்றமும் அரசும் மட்டுமே முடிவு செய்யும். எனவே இது தொடர்பில் வீண் விவாதங்களைத் தவிர்க்க வேண்டும்” – என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இனப் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாகத் தமிழர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை எழுந்தமானமாக நிராகரித்து விட முடியாது. அவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து, அந்தத் தீர்வை வழங்குவதா, இல்லையா என்பது தொடர்பில் நாடாளுமன்றமும் – அரசுமே முடிவு செய்ய முடியும்.

எனவே அதிகாரப் பகிர்வு தொடர்பில் விமர்சனக் கருத்துக்களை முன்வைத்து நாட்டில் மீண்டும் இரத்தக்களரியை ஏற்படுத்த வேண்டாம் என்று சகல தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

இந்தியாவுக்கு வருகை தரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமஷ்டி அதிகாரப் பகிர்வை வலியுறுத்த வேண்டும் என்று தமிழ்த் தரப்புக்கள் கோரிக்கை முன்வைத்து வருகின்றன. இந்தநிலையில், “தமிழர்கள் கோரும் சமஷ்டியை ஒருபோதும் அரசு வழங்காது. அதனைக் கோருவது பயனற்றது” என்று அரச தரப்பு ஆளும் கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More