Sunday, May 5, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். கோப்பாயில் பஸ் மோதி குடும்பஸ்தர் சாவு!

யாழ். கோப்பாயில் பஸ் மோதி குடும்பஸ்தர் சாவு!

1 minutes read

யாழ்ப்பாணத்தில் அதிசொகுசு பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர்  ஒருவர் உயிரிழந்தார்.

கோப்பாய் – இராசபாதை வீதி சந்திக்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற கோப்பாயைச் சேர்ந்த எமில் ரவி (வயது 44) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே சாவடைந்தார்.

விபத்தையடுத்து அதிசொகுசு பஸ்ஸின் சாரதி, பஸ்ஸை அவ்விடத்தில் விட்டுத் தப்பித்துச் சென்ற நிலையில், அவ்விடத்தில் கூடியோர் குழப்பத்தில் ஈடுபட்டு பஸ்ஸின் மீதும் தாக்குதல் நடத்தினர்.

அந்நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார், விபத்து இடம்பெற்ற இடத்தில் கூடிய மக்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தி, உயிரிழந்தவரின் சடலத்தை பொலிஸ் ஓட்டோவில் ஏற்றிச் சென்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

“விபத்து இடம்பெற்ற அதிசொகுசு பஸ் கொழும்பு – யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடுகின்றது. அதில் பயணிகள் இருந்தனர். விபத்தையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பஸ்ஸைத் தாக்கியதுடன், பொலிஸாரையும் தாக்கினர். அதனால் அப்பகுதியில் கூடியவர்களை அகற்றினோம்” – என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More