December 7, 2023 8:16 am

மாணவி துஷ்பிரயோகம்! – ஆசிரியர் கைது

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

பாடசாலை மாணவியொருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

44 வயதுடைய கணித பாடம் கற்பிக்கும் ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வத்தேகம பகுதியில் அமையப்பெற்றுள்ள தனியார் வகுப்பறையில் நீண்ட நாட்களாக குறித்த மாணவியை ஆசிரியர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்