Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை அரசின் கோரமுகம் அம்பலம்! – ரவிகரன் கண்டனம்

இலங்கை அரசின் கோரமுகம் அம்பலம்! – ரவிகரன் கண்டனம்

1 minutes read

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரி.சரவணராஜாவின் பதவி விலகலில் இலங்கை அரசின் கோரமுகம் வெளிப்படுகின்றது என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

நீதிபதி ரி.சரவணராஜா குருந்தூர்மலையில் கட்டப்பட்ட சட்டவிரோத பௌத்த விகாரை வழக்கின் கட்டளைகளைத் தொடர்ந்து கிடைக்கப் பெற்ற நெருக்கடிகள், உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் தொடர் அழுத்தங்கள் காரணமாகத் தனது பொறுப்புக்கள், பதவிகளை இராஜிநாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில்  ரவிகரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகலில் இலங்கை அரசின் கோரமுகம் வெளிப்படுகின்றது. நீதிபதிக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண தமிழ் மக்கள் எவ்வளவு கொடூரமான அரசின் கீழ் கொடூரமான அரசை நடத்திக்கொண்டிருக்கும் இனவாதிகளின் கீழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இந்த விடயத்திலே நீதியின்பால் அவருக்குக் கொடுக்கப்பட்ட மன அழுத்தங்கள், உயிர் அச்சுறுத்தல்கள் ஊடகங்கள் மூலம் வெளிவந்திருக்கின்றது. இப்படியான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் கவனத்தில் எடுத்து தமிழ் மக்களுக்கு இப்படியான நெருக்கடிகள் இலங்கையிலே ஏற்படுகின்றன என்பதை உணர்ந்து மக்களுக்கான தீர்வுத் திட்டங்களையோ அல்லது மக்கள் சுதந்திரமாக வாழக் கூடிய நிலைமையையோ ஏற்படுத்தித் தரவேண்டும்.” – என்றுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More