மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நோக்கம் தனக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். புதிய தலைமைத்துவத்தின் கீழ் கட்சி முன்னோக்கி செல்ல வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (04) கோட்டை ஸ்ரீ சம்புத்தலோக மகா விஹாரைக்கு வருகை தந்த மஹிந்த ராஜபக்ஷ ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
கேள்வி : ஜனாதிபதியின் உரை எப்படி இருந்தது?
பதில் : சரி, அதுதான் கதை.
கேள்வி : சர்வதேச விசாரணை வேண்டாம் என ஜனாதிபதி கூறுகிறாரா?
பதில் : ஆம், அது சரிதான். மக்கள் எதிர்பார்ப்பது இதைத்தான்
இவ்வாறு பதிலளித்தார்.