யாழ்ப்பாணத்தில் இன்று மனித சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் பொலிஸார் தமது கையடக்கத் தொலைபேசிகளில் புகைப்படம் மற்றும் காணொலிகளை எடுத்தனர்.
முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலிப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.
மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாணம் நகர் வரையில் நீளுகின்ற போராட்டமாக இது முன்னெடுக்கப்பட்டது. அதன்போது வீதியில் போக்குவரத்து ஒழுங்குகளைச் சீர் செய்யாது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் புகைப்படம் மற்றும் காணொலி எடுப்பதில் போக்குவரத்துப் பிரிவுப் பொலிஸார் ஆர்வமாக ஈடுபட்டிருந்தனர்.